in

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மொஹரம் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த மொஹரம் புதிய நம்பிக்கைகளுக்கு நல்ல தொடக்கத்தைக் காட்டுவதாக அமையட்டும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மொஹரம் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள மொஹரம் பண்டிகை வாழ்த்து செய்தியில், இசுலாமிய ஆண்டின் தொடக்கமான மொஹரம் அல்லாஹ்வின் தயவையும் கருணையையும் பெற சிறப்பு வாய்ந்த மாதமாகவும் தியாகம் மற்றும் ஆசீர்வாதங்கள் நிறைந்த மாதமாகவும் கருதப்படுகிறது.

இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகள் நம் உள்ளத்தில் ஒரு தெளிவான கண்ணாடியைப் போல அழகாக பிரதிபலித்து, நமது வாழ்க்கைக்கு சரியான பாதையைக் காட்டுவதைப் போல, அருள் நிறைந்த இந்த மொஹரம் புதிய நம்பிக்கைகளுக்கு நல்ல தொடக்கத்தைக் காட்டுவதாக அமையட்டும். மேலும், உங்கள் வாழ்வில் நிறைய மகிழ்ச்சியையும், நல்ல அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் கொண்டுவர எனது உளம் நிறைந்த மொஹரம் தெரிவித்துக்கொள்கிறேன்

What do you think?

புதுச்சேரி கிராமப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன்

தமிழகத்தின் மிகப்பெரிய வளர்ச்சிக்கு அடிப்படை காரணமே காமராஜர் ஆட்சி தான்… முதலமைச்சர் ரங்கசாமி பரபரப்பு பேச்சு