in ,

புதுச்சேரி…உதயநிதி ஒன்றும் கிள்ளுக்கீரை அல்ல புதுச்சேரியில் நாஞ்சில் சம்பத் பேட்டி

புதுச்சேரி…உதயநிதி ஒன்றும் கிள்ளுக்கீரை அல்ல,நீட்டுக்கு எதிரான தலைவர் விரைவில் துணை முதல்வராக பதவி ஏற்று ஸ்டாலின் சுமையை பகிர்ந்து கொள்வார் புதுச்சேரியில் நாஞ்சில் சம்பத் பேட்டி..

உதயநிதியை விமர்சனம் செய்யும் சீமான் பாஜகவின் கைக்கூலி என விமர்சனம்…

புதுச்சேரி லாஸ்பேட்டை நூரே ஹிதாயத்துல் இஸ்லாமியா மஸ்ஜித் சார்பில் சமய நல்லிணக்க விழா லாஸ்பேட்டை பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு சமய நல்லிணக்கம் பற்றி உரையாற்றினார்…

நிகழ்ச்சியில் தொடர்ந்து நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமாகாது.இந்தியா பிளவுபடும்.முட்டாள் தனமானது முடிவு என்றார் மேலும் ஹரியானாவில் தேர்தல் நடக்கிறது.மகாராஷ்டிராவில் ஏன் தேர்தல் நடத்தவில்லை..ஒரே தேர்தல் சாத்தியமில்லை என்று தெரிவித்தார்.

மது ஒழிப்பு மாநாடு மகக்தான வெற்றி பெறும் 2 லட்சம் பெண்கள் திரட்டுகிறார் திருமாவளவன்.இந்தியா கூட்டணி மட்டுல்ல அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் திருமா,அரசுக்கும் இந்தியா கூட்டணிக்கும் உராய்வு ஏற்படுத்த திருமா விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.மாநில சுயாட்சி டெல்லியில் எதிரொலிப்பது போல மது விலக்கு தேசிய அளவில் எழுச்சியாக அமையும் கூறினார்.

சீமான் ஒரு பாஜக கைக்கூலி,உதயநிதி கிள்ளுக்கீரை அல்ல,நீட்டுக்கு எதிரான தலைவர் அதனால் விரைந்து வேகமாக ஸ்டாலின் சுமையை பகிர்ந்து கொள்வார்.விரைவில் உதயநீதி துணை முதல்வராக பதிவு ஏற்பார் கூறியவர்,விஜய் மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிந்தார்…

What do you think?

புதுச்சேரி அகத்தியர்கோட்டம் 15 அடி உயர ஸ்ரீ எம வராஹி அம்மன், ஸ்ரீ காலபைரவர் சுவாமிகளுக்கு நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா

புதுச்சேரி…தனது ஆசிரியர் காலில் விழுந்து பூங்கொத்தை பெற்று கொண்ட மத்திய நிதி அமைச்சர்