in ,

மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கிருத்திகை

மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கிருத்திகை

 

மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கிருத்திகையை முன்னிட்டு வெள்ளி மயில் வாகன உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கிருத்திகையை முன்னிட்டு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி வண்ண மலர்களால் அங்கரிக்கப்பட்டு தங்கக்கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

தொடர்ந்து மகாதீபாரதனை,சத்திரங்கள் கொண்டு சோடச உபச்சாரங்கள், கும்ப தீபம், பஞ்சமுக தீபாரதனை, கற்பூர ஆர்த்தி ஆகியவை காட்டப்பட்டன.

தொடர்ந்து கோயில் உட்பிரகாரம் வந்து வெள்ளி மயில் வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

தொடர்ந்து வெள்ளி மயில் வாகனத்தில் அழகன் முருகன் வள்ளி தெய்வானையுடன் மலை மேல் வலம் வந்து நிகழ்வு நடைபெற்றது.

மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20 ஆம் பட்டம் குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவனான பாலய சுவாமிகள் மற்றும் ஆலய நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தம்

என்னிடம் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும்…நடிகை சிம்ரன்