in ,

காஞ்சிபுரம் அருள்மிகு முத்தீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷ விழா

காஞ்சிபுரம் அருள்மிகு முத்தீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷ விழா விமர்சையாக நடைபெற்றது

காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு முத்தீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷ விழா விமர்சையாக நடைபெற்றது இதில் உற்சவர் மற்றும் மூலவர் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று தொடர்ந்து பிரதோஷ பகவான் நந்தி வாகனத்தில் எழுந்தருளி ஆலய வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து சிறப்பு தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் குழு தலைவர் சரவணக்குமார் அறங்காவலர்கள் பாலச்சந்தர். கடம்பன்‌.தசரதன்.ஏகாம்பரம் உள்ளிட்டோர் பக்தர்களுடன் இணைந்து விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர் இதில் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுகலந்து சிவபெருமானின் பேரருளை பெற்று சென்றனர் விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது

What do you think?

நத்தம் அருகே சாக்கடை பிரச்சனையில் பெண்ணை தாக்கிய நபர் – சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

தரமற்ற முறையில் தார் சாலை அமைக்கப்படுவதாக மக்கள் புகார்