in ,

அசலதீபேஸ்வரர் சிவாலயத்தில் புரட்டாசிமாத தேய்பிறை அஷ்டமி- வழிபாடு

அசலதீபேஸ்வரர் சிவாலயத்தில் புரட்டாசிமாத தேய்பிறை அஷ்டமி- வழிபாடு

 

நாமக்கல் காவிரி கரைமீதுள்ள அசலதீபேஸ்வரர் சிவாலயத்தில் புரட்டாசிமாத தேய்பிறை அஷ்டமி- வழிபாடு செய்த பக்தர்கள்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி கரை மீதுள்ள அருள்மிகு அசலதீபேஸ்வரர் சிவ ஆலயம் வடக்கிலிருந்து தெற்கே செல்லும் காவிரி கரை மீது அமைந்துள்ள இந்த ஸ்தலம் அசையா தீபம் மூலவர் முன் பக்தர்களுக்கு காட்சி தருவது சிறப்பு தேவார வைப்பு ஸ்தலம் 1000 ஆண்டு முன் பழமை சிவ ஆலயத்தில் புரட்டாசிமாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கோவில் வளாக முன் சிறப்பு யாக வேள்விகள் அமைக்கப்பட்டு பூரணாகதி நிறைவுற்ற பின் இங்கு தனி சன்னதியில் உள்ள காலபைவருக்குபஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் இளநீர் கரும்புச்சாறு திருமஞ்சனம் மஞ்சள் சந்தனம் விபூதி கலசதீர்த்தம் கொண்டு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரமாக, அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு பஞ்சதீப உபசரிப்பு ஆராதனைகளும் மஹாதீபம் காண்பிக்கப்பட்டது.

பின் இங்குள்ள ஸ்ரீ சரபேஸ்வரருக்கு மஹா தீபம் காண்பிக்கப்பட்டன பக்தர்கள் வெண் பூசணிக்காய் தீபம் ஏற்றி னர் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதான நிகழ்வு நடைபெற்றன.

What do you think?

மெய்யழகன் ( Meiyazhagan )

ஆர்த்தி மேல் போலீஸில் புகார்