in

ரெட்டின் கிங்சிலி என்னை வீட்டுக்குள்ளே வெச்சி பூட்டிட்டு போய்ட்டார்

ரெட்டின் கிங்சிலி என்னை வீட்டுக்குள்ளே வெச்சி பூட்டிட்டு போய்ட்டார்

 

ரெட்டின் கிங்சிலி மற்றும் சின்னத்திரை நடிகை சங்கீதா இருவரும் அண்மையில் ஒரு Youtube சேனலுக்கு பேட்டி அளித்தனர்.

தாங்கள் இருவரும் ப்ளடி பக்கர் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது பல விஷயங்களை என்னிடம் சங்கீதா ஷேர் செய்வார். அப்பொழுது எங்களுக்குள் ஆரம்பித்த காதல் ஒரு கட்டத்தில் சூட்டிங் ஸ்பாட்டிலேயே திருமணத்தை முடித்து விடலாம் என்று நான் எண்ணினேன்.

ஏனென்றால் நவம்பர் மாதம் திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்த போது ப்ளடி பகர் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிஸியாக இருந்ததால் அங்கேயே திருமணத்தை முடித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன் என்றார் ரெடின்.

நள்ளிரவு ஒரு மணி வரை ஷூட்டிங்கில் இருந்தவர் திருமணத்துக்கு தேவையான எல்லாத்தையும் வாங்கி வைத்துக் கொண்டு அடுத்த நாள் திருமணம் நடக்குமா நடக்காதா என்று நான் பயத்துடன் இருந்தேன் என்று சங்கீதா கூறியுள்ளார்.

திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் கழித்து ஒரு நாள் ஒரு ஹோட்டலுக்கு சென்றோம் அப்பொழுது ஒரே ஒரு டீ மட்டும் ஆர்டர் செய்து அவர் மட்டும் கொடுத்தார் நான் இருப்பதையே மறந்து விட்டார்.

மேலும் ஒரு நாள் நான் வீட்டில் இருக்கும் பொழுது என்னை வீட்டுக்குள்ளே வைத்து பூட்டிவிட்டு சென்றுவிட்டார் என்று அவர் லீலைகளை கூறி சங்கீதா கலாய்த்தபோது நான் இன்னும் பேச்சிலராகத்தான் என்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன் பாஸ் என்று பதிலுக்கு அவரும் கலாய்த்தார்.

இவர்களின் ஜோடியை பார்த்து பல பேர் ஏகப்பட்ட விமர்சனங்களை வைத்தாலும் ரெட்டின் கிங் ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லுவான் அதையெல்லாம் நீ காதில் வாங்கி கொள்ளாதே அந்த விமர்சனத்தை எல்லாம் பார்க்கவும் பார்க்காதே என்று நான் சங்கீதாவுக்கு அட்வைஸ் செய்திருக்கிறேன் என்று ரெடின் கூறியுள்ளார்.

What do you think?

நடிகர்களின் அந்தரங்க விஷயத்தை அம்பலப்படுத்தி எல்லோரிடமும் வாங்கி கட்டிக் கொள்பவர் பயில்வான் ரங்கநாதன்

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட வாழ்வாதார பிரச்சனை தேசிய மனித உரிமை ஆணையம் நேரில் விசாரணை