in

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.‌

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்‌ தாதம்பட்டி கிராமத்தில் விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக கட்டப்பட்ட கலைஞரின் கனவு இல்லத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.‌

அதன்படி அருப்புக்கோட்டை அருகே கட்டங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட தாதம்பட்டி கிராமத்தில் விருதுநகர் மாவட்டத்தில் முதன் முறையாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கலைஞரின் கனவு இல்லத்தை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ பயனாளியின் கையாலேயே திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.‌ அதனைத் தொடர்ந்து தாதம்பட்டி கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையையும், கோவிலாங்குளம் ஊராட்சியில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார். மேலும் கலையரங்க கட்டிடம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து குறிஞ்சாங்குளம் கிராமத்தில் புதிய நியாய விலை கடை கட்டிடத்தை திறந்து வைத்து, ஆத்திபட்டி ஊராட்சி பெத்தம்மாள் நகரில் புதிய நியாய விலை கடை கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். இறுதியாக கஞ்சநாயக்கன்பட்டியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள குளியல் தொட்டியையும் அமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What do you think?

திருப்பதி பௌர்ணமி கருட சேவை.

சிவகாசி ரயில் நிலையத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் இரும்பு பாதை போலீசார் ரயில் பயணிகளின் உடைமைகளை தீவிரமாக சோதனை