in

திருச்சி எஸ் ஆர் எம் நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் 2024 25 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த படிப்புகளின் முதலாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

திருச்சி எஸ் ஆர் எம் நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் 2024 25 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளின் முதலாம் ஆண்டு மாணவர்கள் தொடக்க விழா இனிதே நடைபெற்றது.

விழாவில் எஸ்ஆர்எம் ராமாபுரம் மற்றும் திருச்சி வளாக முதன்மை இயக்குனர் முனைவர் சேதுராமன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். விழாவின் சிறப்பு விருந்தினராக மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் திருப்பதி கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமூட்டுமாறு உரை நிகழ்த்தினார்.

முன்னதாக செயல்முறை கல்லூரியின் தலைவர் டாக்டர் சுரேஷ் வரவேற்புரை ஆற்ற தொடர்ந்து SRM நிகழ்நிலைப் பல்கலைக்கழக திருச்சி வளாக நிர்வாக இயக்குனர் டாக்டர் சம்பந்தம், எஸ் ஆர் எம் திருச்சி வளாக இணை இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணியன் மருத்துவம் சார்ந்த படிப்புகளின் துணை இயக்குனர் டாக்டர் சிவக்குமார் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர் விழாவின் நிறைவாக மருத்துவம் சார்ந்த படிப்புகளின் கல்லூரி முதல்வர் டாக்டர் குமார் எபினேசர் நன்றி உரை வழங்கினார் .விழாவில் 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியரும் பெற்றோரும் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.

What do you think?

காவிரியில் தமிழகத்திற்கான நீரை பெற்றுத்தர கர்நாடகா அரசை நிர்பந்தம் செய்ய வேண்டும் – காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை திருச்சியில் பேட்டி

ரஜினிக்கு வில்லனாக என்னால் நடிக்க முடியாது