in

கடலோர பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க சாகர் கவச் ஒத்திகை


Watch – YouTube Click

கடலோர பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க சாகர் கவச் ஒத்திகை

 

திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை கடலோர பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க சாகர் கவச் ஒத்திகை நூற்றுக்கும் மேற்பட்ட  போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே   முத்துப்பேட்டையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க 2024-ம் ஆண்டிற்கான சாகர் கவச் பாதுகாப்பு ஒத்திகை   முத்துப்பேட்டை  கடலோர பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும   காவல் உதவி ஆய்வாளர் ரகுபதி தலைமையில்  தம்பிக்கோட்டை கீழக்காடு, பேட்டை , ஜாம்பவனோடை, , சின்னான் கொள்ளைக்காடு உள்ளிட்ட 6 இடங்களிலும்  கடலோர பாதுகாப்பு படை போலீசார் படகில் சென்று கடல்பகுதியிலிருந்து வரும் மீனவர்களின் படகு சுற்றுலா பயணிகளின் படகுகள் உள்ளிட்டவற்றை  சோதனை செய்து வருகின்றனர்.

மேலும் கடல் வழியாக யாரேனும் புதிய நபர்கள் வந்தால் உடனடியாக கடலோர காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

மேலும் இலவச எண் 1093 என்னை தொடர்பு கொண்டும் தகவல் தெரிவிக்கலாம் என்றும் போலீசார் மீனவர்களுக்கு அறிவுறுத்தினர்

மேலும் முத்துப்பேட்டை நகர் பகுதிகளில் ஏராளமான போலீசார் தம்பி கோட்டை கீழக்காடு பேட்டை, கோபாலசமுத்திரம், உள்ளிட்ட7 இடங்களில் சிறப்பு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் .


Watch – YouTube Click

What do you think?

LEO 2…வில் விஜய் கேரக்டரில் நடிக்க போவது யார்?

இரண்டாவதாக பிறந்த குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீதேவி அசோக்