in

மணல்மேடு அரசு கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மணல்மேடு அரசு கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம்

 

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மணல்மேடு அரசு கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய மேற்குவங்க பெண் மருத்துவர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், வழக்கில் நீதி கேட்டும், பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் இன்று வகுப்புகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகள் கொலை குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

What do you think?

தஞ்சை அரசு சரபோஜி கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்

திருச்சுழி அருகே அம்பனேரி ஓடையில் மணல் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது; டிராக்டர் பறிமுதல்