சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக தூய்மை பணியாளர்களுக்கு சேலை
காரைக்காலில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக தூய்மை பணியாளர்களுக்கு சேலைகள் வழங்கிய தனியார் பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளி மாணவர்கள் சேலைகளை வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
காரைக்காலில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு சேலைகள் வழங்கிய அவர்களை கௌரவ படுத்திய தனியார் பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளி மாணவர்கள்.
இந்நிகழ்ச்சியில் காரைக்கால் நகராட்சி ஆணையர் சத்யா பங்கேற்றார் மேலும் கே.எம்.கே பள்ளி தாளாளர் மது கண்ணையன் துணை நிர்வாகி மகேஷ் மான் சிகா கண்ணையன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து சின்னஞ்சிறு பள்ளி குழந்தைகள் தூய்மை பணியாளர்களுக்கு சேலைகளை வழங்கி மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.