in ,

திருவண்ணாமலையில் ஆடி மாத பௌர்ணமி முடித்து ஊர் திரும்பும் பக்தர்கள் ரயிலில் முண்டியடித்து ஏறிச் செல்லும் காட்சிகள்.

திருவண்ணாமலையில் ஆடி மாத பௌர்ணமி முடித்து ஊர் திரும்பும் பக்தர்கள் ரயிலில் முண்டியடித்து ஏறிச் செல்லும் காட்சிகள்.

திருவண்ணாமலையில் ஆடி மாத பௌர்ணமி நேற்று மாலை தொடங்கி இன்று மாலை வரை உள்ளது என்பதால் நேற்று மாலை முதலே பக்தர்கள் திருவண்ணாமலை 14 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள கிரிவல மலையை கிரிவலம் செய்ய ஆரம்பித்தனர் இதற்காக தமிழகம் ஆந்திரா, கர்நாடகா கேரளா தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து 15 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர் இவர்கள் சிறப்பு பேருந்துகள் மூலம் கார்களில் மூலம் வந்து கிரிவலம் செய்துவிட்டு செல்கின்றனர்.

இவர்கள் கிரிவலம் முடித்துவிட்டு இன்று ஊர் திரும்பும் பொழுது திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் விழுப்புரத்தில் இருந்து காட்பாடிக்கு செல்லும் ரயிலில் பக்தர்கள் முண்டியடித்து ஏறி சென்றனர் மேலும் இது போன்ற விசேஷ தினங்களில் அதிக அளவு சிறப்பு ரயில்கள் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாகவே உள்ளது.

இந்த ஆடி மாத பௌர்ணமி சனி ஞாயிறு ஆகிய விடுமுறை தினங்களில் வருவதால் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் அளவு அதிகமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

What do you think?

செங்கத்தில் அறநிலைக்கு சொந்தமான பச்சையம்மன் ஆலயத்தில் 103 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

திருவண்ணாமலைக்கு கிரிவலம் செய்ய 15 லட்சம் மேல் குவிந்த பக்தர்கள்