in

செஞ்சி பிரபல மகப்பேறு பெண் மருத்துவர் போக்சோ வழக்கில் தலைமறைவு

செஞ்சி பிரபல மகப்பேறு பெண் மருத்துவர் போக்சோ வழக்கில் தலைமறைவு- திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் வலை வீச்சு.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சக்கராபுரம் மண்டபத் தெருவில் வசித்து வரும் பிரபல மகப்பேறு பெண் மருத்துவர் கலாஸ்ரீ(55) என்பவர் விழுப்புரம் சாலையில் லட்சுமி என்ற பெயரில் மகப்பேறு மற்றும் பொதுநலம் மருத்துவம் பார்க்கும் கிளினிக்கை கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவர் தற்போது புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த சதீஷ்(24) என்ற இளைஞர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்ததாக தெரிகிறது. இதனால் சதீஷ் தன்னுடைய அக்கா கணவரான கன்னியப்பன்(33) என்பவரிடம் சிறுமி கர்பத்தை கலைக்க உதவி கேட்டுள்ளார். இதனை அடுத்து செஞ்சியில் உள்ள மகப்பேறு மருத்துவர் கலாஸ்ரீயை அனுகி சிறுமியின் கருவை கலைக்க கேட்டுள்ளனர்.

இதனை அடுத்து கடந்த வாரம் மருத்துவர் கலாஸ்ரீ செஞ்சி சக்கராபும் பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து சட்டவிரோதமாக சிறுமிக்கு கருகலைப்பு செய்துள்ளார். மேலும் அந்த சிசுவை வேட்டவலம் பகுதியில் யாருக்கும் தெரியாமல் புதைத்துள்ளனர்.

இது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், 17-வயது சிறுமியை கர்ப்பமாக்கியது மட்டுமில்லாமல் சட்டவிரோதமாக கருகலைப்பு செய்ததாக இளைஞர் சதீஷ் மற்றும் அவரது அக்கா கணவரான கன்னியப்பன் ஆகிய இவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சட்டவிரோதமாக தனது வீட்டில் வைத்து சிறுமிக்கு கருகலைப்பு செய்ததாக மருத்துவர் கலாஸ்ரீ மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்த திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்ய செஞ்சிக்கு வந்தபோது பெண் மருத்துவரின் வீடு மற்றும் கிளினிக் ஆகியவை பூட்டியிருந்த இருந்த நிலையில் அவரது தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட போது அதுவும் அனைத்து வைக்கப்பட்டு அவர் தலைமறைவாகி உள்ளார் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்ய திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் தீவிரம் காட்டி வரும் நிலையில் மருத்துவரை கைது செய்யாமல் இருக்க அதிகார பலத்தில் உள்ள பலர் போலீசாருக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

What do you think?

கட்சியை இணைப்பது தான் ஒரே வழி. இனி வரக்கூடிய தேர்தல்களில் வெற்றி பெற வேண்டுமென்றால் கட்சி இணையாமல் அது சாத்தியமில்லை – ஓபிஎஸ் பேட்டி

கதறி அழுது விடை கொடுத்த பள்ளி மாணவ மாணவிகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்