in

அந்த ஷோ…வால் என் முட்டியே உடைந்து விட்டது சீரியல் நடிகை சரண்யா துருடி


Watch – YouTube Click

அந்த ஷோ…வால் என் முட்டியே உடைந்து விட்டது சீரியல் நடிகை சரண்யா துருடி

விஜய் டிவியில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை சரண்யா துருடி அதன் பிறகு இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். இவர் தெலுங்கில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் நடித்தார் அதன் பிறகு சன் டிவியில் ரன் என்ற சீரியலில் கிருஷ்ணாவோடு நடித்தார்.

ஆனால் அந்த சீரியல் திடீரென்று முடிவுக்கு வந்துவிட்டது அதன் பிறகு விஜய் டிவியில் ஆயுத எழுத்து என்ற சீரியலிலும் நடித்தவர் அதன் பிறகு எந்த சீரியலிலும் தளி காட்டாதவர் தற்பொழுது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 என்ற சீரியல் தங்கமயில் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். அது மட்டும் அல்லாமல் ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருப்பவர் அந்நிகழ்ச்சியின் மூலம் தான் பட்ட வேதனையை தற்போது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் நாய்க்குட்டி வேஷம் போட்டு perform பண்ணினேன் .

முதல் நாள் பண்ணும் பொழுது எனது கால் முட்டி இரண்டும் வலிக்க ஆரம்பித்தது இரண்டாம் நாள் என்னால் எழுந்திருக்கவே முடியவில்லை மூன்றாம் நாள் என் காலில் இருந்து ரத்தம் வரஆரம்பித்துவிட்டது நான்காவது நாள் நாங்கள் ஸ்டேஜ் ரீகர்சல் பண்ணும் பொழுது கண்டிப்பாக நாங்கள் வெளியேறி விடுவோம் என்று நினைத்தேன் stage perform பண்ணும் போது நிச்சயம் நாங்கள் eliminate ஆகிவிடும் நிலையில் தான் இருந்தோம் திடீரென்று என்னுள் எப்படி அந்த ஆவேசம் வந்தது என்று தெரியவில்லை

எனக்கு இரண்டு முட்டிகள் இருப்பதையும் நான் மறந்து ஆடிக் கொண்டிருந்தேன் ஆடி முடித்ததும் நாங்கள் எழுந்து நிற்கும்பொழுது ஜட்ஜ் மட்டும் அல்ல ஆடியன்ஸும் நின்று கைதட்டிக் கொண்டிருந்தார்கள் எப்பொழுதுமே நெகட்டிவ் பாயிண்ட் சொல்லும் ஜட்ஜ் கண்கலில் இருந்து அன்று நான் கண்ணீரை பார்த்தேன் ஒரு சிலர் பணத்திற்காக ஷோ பண்ணுவார்கள் ஒரு சில வெற்றிக்காக பண்ணுவார்கள்.

ஒரு வெற்றிக்காக நம்மை நாம் அர்ப்பணிக்கும் பொழுது அது எந்த அளவுக்கு நமக்கு பேர் வாங்கி கொடுக்கும் என்பதை நான் உணர்ந்து கொண்டேன் நான் என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட வலி மிகுந்த சந்தோஷத்தை அனுபவித்தது இல்லை என்று சரண்யா பகிர்ந்து உள்ளார்


Watch – YouTube Click

What do you think?

வைரலாகும் தனுஷின் புதிய தோற்றம்

மறைவதற்கு முன்னால் உருக்கமாக பதிவை வெளிட்ட செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா அமுதம்