in

செஞ்சி பகுதியில் தொடர் நள்ளிரவு திருட்டு.

செஞ்சி பகுதியில் தொடர் நள்ளிரவு திருட்டு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சுற்றுவட்டார பகுதியில் நள்ளிரவில் தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது.

செஞ்சி சேத்துப்பட்டு சாலையில் அமைந்துள்ள சோலையம்மன் கோயிலின் பூட்டை உடைத்து கருவறையில் அம்மன் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இந்நிலையில் மர்ம நபர் தலையில் போர்வையால் முகத்தை மூடிக்கொண்டு கோயிலின் பூட்டை உடைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இச்சம்பவுத்தினை தொடர்ந்து இரவு செஞ்சி அடுத்த வல்லம் ஒன்றியத்துக்குட்பட்ட வடபுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து

விலை உயர்ந்த சுமார் 2 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களை திருடி சென்றுள்ளனர்.

மலிவு விலை மதுபானங்களை தவிர்த்து விலை உயர்ந்த மதிப்பாணங்களை கொள்ளை அடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்துள்ளது மேலும் டாஸ்மார்க் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவையும் திருட்டு கும்பல் எடுத்துச் சென்றுள்ளது.

குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

தொடர்ந்து செஞ்சி சுற்று வட்டார பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு,கோயில்களில் உண்டி,நகைகள் திருட்டு,மதுபான கடையில் மதுபானங்கள் திருட்டு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்

What do you think?

திருச்சி மாநகராட்சி 40 வது வார்டு பகுதியில் கழிவு நீர் வடிகால் வேண்டி அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை

இலவச அனுமதி வழங்க வேண்டி செஞ்சி நகர வியாபாரிகள் ஊர்வலம்