in

பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டதால் அதிர்ச்சி


Watch – YouTube Click

பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டதால் அதிர்ச்சி

புதுச்சேரி…ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் பாதாள சாக்கடை வழியாக விஷவாயு தாக்கி 3 பெண்கள் பலியானதை கண்டித்து பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை அதிமுகவினர் முற்றுகை

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகரில் விஷவாயுத்தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டன தெரிவித்து அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார்.

பொதுப்பணி துறையை கண்டித்தும் பொதுப்பணித்து அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் இவர்கள் ஆர்ப்பாட்டங்கள் கோஷ உறுப்பினர்கள் ஒரு கட்டத்தில் அனைவரும் தலைமை பொறியாளர் அலுவலகத்திற்கு உள்ளே சென்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் நடத்தினர்.

கடந்த கொரோனா காலத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு நிர்வாகம் எவ்வாறு செயல்பட்டதோ அதேபோன்று இந்த கழிவுநீர் கால்வாய் விஷவாயு விவகாரத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு நிர்வாகம் செயல்பட வேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தினார்கள்.

இதனிடையே அங்கு வந்த பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன்,புதுநகர் பகுதியில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூற போராட்டம் கைவிடப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

முடிவுக்கு வரும் பிரபல விஜய் டிவி சீரியல்

CPI நல்லகண்ணு சகோதரி மகளின் உடல் உறுப்புகள் தானம்