in

லால்குடியில் முன்விரோதத்தில் தமிழக வெற்றி கழக பிரமுகர் வெட்டிக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி மீது துப்பாக்கி சூடு

லால்குடியில் முன்விரோதத்தில் தமிழக வெற்றி கழக பிரமுகர் வெட்டிக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி மீது துப்பாக்கி சூடு

லால்குடியில் முன்விரோதத்தில் தமிழக வெற்றி கழக பிரமுகர் வெட்டி படுகொலை செய்த ரவுடி கலைப்புலி ராஜா 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் ரவுடி கலைப்புலி ராஜா மணச்சநல்லூர் அருகே உள்ள சிறு கண்ணூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரை தாக்க முற்பட்டபோது போலீசார் ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர் காயமடைந்த ரவுடி கலைப்புலி ராஜா லால்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை வ.உ.சி நகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் நவீன் என்கிற நவீன்குமார் (29). தமிழக வெற்றி கழக பிரமுகரான இவர் மீது சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவருக்கு மனைவியும், அனுசியா என்ற மனைவியும்,பிரணவ் கிருஷ்ணன் (6) என்ற மகனும் உள்ளனர்.

அதேபோல், லால்குடி அருகே ஆதிகுடி கோவிந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா என்கிற கலைப்புலி ராஜா (27). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இருவரும் நண்பர்கள் ஆவர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே யார் பெரிய ஆள் ? என்ற பிரச்சனை இருந்து வந்ததால் ஒருவருக்கொருவர் பேசுவதை தவிர்த்து விட்டனர்.

இந்நிலையில், கடந்த 2 ம் தேதி மலையப்பபுரத்தைச் சேர்ந்த ராஜாவின் நண்பர் மகளுளின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ராஜா, நவீன்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கலந்து கொண்டு மது அருந்தினர்.

அப்போது, ராஜா போதை தலைக்கேறிய நிலையில், நீ என்ன பெரிய ஆள ? என்று நவீன்குமார் மற்றும் அவரது நண்பர்களை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால், கோபமடைந்த நவீன்குமாரின் நண்பர் லால்குடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். இந்த விஷயம் எப்படியோ ராஜாவுக்கு தெரியவந்தது.
இதனால், ராஜா ஆத்திரமடைந்தார்.

இதையடுத்து, நவீன்குமாருக்கு ஸ்கெட்ச் போட்ட ராஜா நேற்று முன்தினம் 3 ம் தேதி லால்குடி அகிலாண்டேஸ்வரி நகர் பகுதிக்கு நவீன்குமாரின் நண்பர் செல்போன் மூலம் அவரை நைசாக பேசி வரவழைத்தார். அங்கு கலைப்புலி ராஜா மற்றும் நவீன்குமார் ஆகியோரின் நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மது அருந்தினர்.‌ அப்போது, நவீன்குமார் நண்பர்கள் போதையானதால், அவர்கள் அனைவரையும் தனது நண்பர்கள் பைக்கில் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

அப்போது, ரவுடி கலைப்புலி ராஜா மற்றும் அவரது நண்பர்கள் நவீன்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு அனைவரும் தப்பியோடினர்.

புகாரின் பேரில் லால்குடி டிஎஸ்பி ரகுபதி ராஜா, இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் நவீன்குமாரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய ரவுடி கலைப்புலி ராஜா, ஸ்ரீநாத் உட்பட 6 பேரை வலைவீசி தேடி வந்த நிலையில் ரௌடி கலை புலி ராஜா மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூர் வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக லால்குடி போலீசருக்கு தகவல் கிடைத்தது அடிப்படையில் போலீசார் அங்கு சென்றபோது போலீசாரை தாக்க முயன்றதால் போலீசார் வைத்திருந்த துப்பாக்கியால் ரவுடியின் காலில் சுட்டு பிடித்தனர் காயமடைந்த ரவுடி கலைப்புலி ராஜா சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்

What do you think?

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இரண்டு குழந்தைகளுடன் தம்பதியினர் தர்ணா

தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை….