in

மறைவதற்கு முன்னால் உருக்கமாக பதிவை வெளிட்ட செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா அமுதம்


Watch – YouTube Click

மறைவதற்கு முன்னால் உருக்கமாக பதிவை வெளிட்ட செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா அமுதம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா அமுதம் இரண்டு நாட்களுக்கு முன் மறைந்தார் தனது கணீர் குரலாலும் அழகான தமிழ் உச்சரிப்பாலும் ரசிகர்களிடம் பிரபலமானவர் செய்தி வாசிப்பாளரான சௌந்தர்யா கடந்த ஆறு மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி மறைந்தார்

இந்த புற்று நோய்… என்னை ஒன்றுமே பண்ணமுடியாது இதில் இருந்து மீண்டு வந்து மறுபடியும் சாதனை படைப்பேன் என்று கூறியவர் தற்போது நம்முடன் இல்லை, இவருடைய எலும்பு மஜையில் புற்றுநோய் உருவாக்கியதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவருக்கு ஏ எம் எல் என்னும் ரத்த புற்றுநோய் இவருக்கு உருவாகி இருபது கண்டறியபட்டது.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட சவுந்தர்யா சிகிச்சை பலனின்றி மறைந்தார். மறைவதற்கு முன்னால் விழிப்புணர்வு பதிவு ஒன்றை அறிவுரையாக தனது ரசிகர்களுக்கு வழங்கி இருக்கிறார்.

அதாவது முடிந்தவரை செயற்கையான உணவுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள் இயற்கையான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் அமெரிக்காவில் ரெட் புல் என்னும் பானத்தால் 20 முதல் 40 வயது உட்பட்டவர்கள் குடல் புற்று நோயால் அவதிப்பட்டு வருவதாக அண்மையில் ஆய்வு ஒன்று சொல்கிறது புற்றுநோய் வருவதை தவிர்ப்பதற்கு நாம் வெளியில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் வெளியில் கிடைக்கும் உணவில் என்ன கலக்கிறார்கள் எப்படி சமைக்கிறார்கள் என்று நமக்கு தெரியாது அதனால் முடிந்தவரை சாக்லேட், சிப்ஸ், ட்ரிங்க்ஸ் ,ஊறுகாய் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள்.

நம்முடலில் ரசாயனம் சேர சேர வேதியியல் ரீதியாக நமது உடல் அதனை ஏற்றுக் கொள்ளாது முடிந்தவரை ஆரோக்கியமான உணவுகளை வீட்டில் சமைத்து நலமுடன் நீண்ட நாட்கள் வாழுங்கள் என்று தன் மறைவிற்கு பின்பும் மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி சென்றிருகிறார் சௌந்தர்யா.

ஆரோக்கியமாக இருக்கு விரும்புகிறவர்கள் ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்கும் மனநிலையை உருவாக்கி கொள்ள வேண்டும்


Watch – YouTube Click

What do you think?

அந்த ஷோ…வால் என் முட்டியே உடைந்து விட்டது சீரியல் நடிகை சரண்யா துருடி

வீட்டின் பூட்டை உடைத்து 43 பவுன் நகை மற்றும் 1.50 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை