in ,

திண்டிவனம் ஸ்ரீ சுந்தர விநாயகருக்கு மண்டல அபிஷேக 20-ம் நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

திண்டிவனம் ஸ்ரீ சுந்தர விநாயகருக்கு மண்டல அபிஷேக 20-ம் நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

 

திண்டிவனம் ஸ்ரீ சுந்தர விநாயகருக்கு மண்டல அபிஷேக 20-ம் நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மூங்கிலம்மன் கோயில் தெருவில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ சுந்தர விநாயகர் கோவிலில் மண்டல அபிஷேக 20 ஆம் நாளை முன்னிட்டு பால் தயிர் சந்தனம் பஞ்சாமிர்தம் திராட்சை உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கலச நீரால் உற்சவர் மற்றும் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ சுந்தர விநாயகருக்கு பஞ்சமுக தீபாரதனை, மற்றும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

இன்றைய நிகழ்ச்சிக்கான உபயதாரர் ஏரிக்கோடி தெரு சண்முகம் மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமாதஸ்

சர்வதேச காதுகேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகைமொழி தினம் அனுசரிக்கப்பட்டது