in ,

சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் சிறப்பு அலங்கார ஆராதனைகள் வழிபாடுகள் நடைபெற்றது

சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் சிறப்பு அலங்கார ஆராதனைகள் வழிபாடுகள் நடைபெற்றது

 

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் ஐப்பசி மாத முன்னிட்டு உற்சவர் பெருமாள் மற்றும் மூலவர் பெருமாளுக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது.

முன்னதாக நின்ற நிலையில் அருள் பாலிக்கும் மூலவர் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயார்கள் மற்றும் உற்சவர் தெய்வங்களுக்கு வண்ணமலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க நட்சத்திர தீபம் நாகதீபம் கும்ப தீபம் மற்றும் சோடச உபச்சாரங்கள் நடைபெற்று துளசியால் அர்ச்சனைகள் செய்யப்பட்டன நிறைவாக பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் தாயாரை வழிபாடு செய்தனர் .

What do you think?

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

டாஸ்மாக் மாவட்ட மேலாளர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டபோது பிடிபட்டார்