in ,

ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய ஆறாம் ஆண்டு தேர் திருவிழா குதிரை வாகன வீதி உலா

ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய ஆறாம் ஆண்டு தேர் திருவிழா குதிரை வாகன வீதி உலா

 

ஒலக்கூர் கிராமம் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய ஆறாம் ஆண்டு தேர் திருவிழாவில் 2ம் நாள் நிகழ்ச்சியாக மீனாட்சி அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் இரவு வீதி உலா சிறப்பாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய ஆறாம் ஆண்டு தேர் திருவிழாவில் 23ஆம் தேதி துவஜாரோஹணம் எனும் கொடியேற்றத்துடன் துவங்கியது.

மேலும் 2ம் நாள் மூலவர் முத்தாலம்மன் மற்றும் உற்சவர் மீனாட்சி அலங்காரத்தில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாரதனை, பஞ்சமுக தீபாரதனை, கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

உற்சவர் மீனாட்சி மீனாட்சி அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் இரவு வீதி உலா காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் வரும் 26 ஆம் தேதி காலை 12 மணியளவில் நடக்கிறது.

What do you think?

அருள்மிகு அன்னை ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 21 ஆம் ஆண்டு சாகை வார்த்தல்

திண்டிவனம் இலுப்பதோப்பு ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் ஆலயத்தில் வீதி உலா