in

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடிப்பூரம் திருவிழா தீர்த்தவாரி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடிப்பூரம் திருவிழா தீர்த்தவாரி

 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடிப்பூரம் திருவிழாவின் தீர்த்தவாரி நிகழ்வு இன்று நடைபெற்றது…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழாவின் இறுதி நிகழ்வான தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 108 வைணவ தேசங்களில் மிக முக்கியமானது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரம் திருவிழா கடந்த மாதம் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஐந்து கருட சேவை அதனையடுத்து சயன சேவை நடைபெற்றது.

ஆடிப்பூர விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் 7 ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்க மன்னார் கோவிலில் இருந்து வெளியே எழுந்தருளி மீண்டும் கோவிலுக்கு செல்லும் நிகழ்வானது தீர்த்தவாரி என்று அழைக்கப்படும். அதன் அடிப்படையில் இன்று ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்க மன்னாரின் திருவடிகளான சடாரிகளுக்கு திருமுக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக ஸ்ரீ ஆண்டாளையும் ஸ்ரீ ரெங்க மன்னரையும் வரவேற்று ரத வீதிகள் வழியாக சடாரி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து நகரின் மையப் பகுதியில் இருக்கும் திருமுக்குளத்தில் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னாரின் சபாரிகளுக்கு மஞ்சள் மற்றும் சந்தனத்தால் ஆன அபிஷேகங்கள் நடைபெற்றன.

திருக்கோவில் பட்டாச்சாரியார்கள் சடாரிகளை சுமந்தவாறு ரதவீதி வழியாக வந்து திருமுக்குளத்தில் முங்சி எழுந்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சுவாமிகளின் சடாரிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதனையடுத்து ஆடிப்பூர விழாவின் கொடியேற்றத்தில் இருந்து 10 நாட்களாக திருக்கோவிலில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த சுவாமிகள் இருவரும் இன்று மீண்டும் தங்களின் இருப்பிடத்திற்கு திரும்பினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களின் பக்தியை வெளிப்படுத்தினர்.

What do you think?

காரியாபட்டி கணக்கணேந்தல் புத்துக்கோவிலில் நாகபஞ்சமி சிறப்பு அபிஷேக ஆராதனை

துறையூர் பாலக்கரை அருகே வீடியோ எடுத்த மர்ம நபருக்கு தர்ம அடி