in

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி


Watch – YouTube Click

அயோத்தி பாலராமர் இண்டியா கூட்டணிக்கு ஆதரவாக உள்ளார் என்றும் ,ராமர் கைவிட்டுவிடுவாரோ என்பதால்தான் விவேகானந்தர் பாறைக்கு மோடி வருகிறார் என்று வைத்திலிங்கம் எம்பி விமர்சித்துள்ளார்

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி,

“புதுச்சேரியில், மேல் படிப்பு படிக்க மாணவர்களும், பெற்றோரும் சான்றிதழுக்காக வருவாய்த்துறைக்கு அலைகின்றனர்.முதல்வர் இதை சரியாக கவனிக்கவில்லை. அறிவிக்கப்படாத மின்வெட்டு புதுச்சேரியில் அதிகரித்துள்ளது. மின்துறை அமைச்சர் தொகுதியிலேயே இப்பிரச்சினை உள்ளது. பொதுமக்கள் மின்வெட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் பற்றி ஆளுநரும், டிஜிபியும்தான் சொல்கிறார்கள். முதல்வர், அமைச்சர்கள் வாய்திறப்பதே இல்லை. யார் இதில் துணையாக உள்ளார்கள் என்ற சந்தேகம் எழுகிறது.

அயோத்தி ராமர் கோயில் கட்டிய இடத்தில் இண்டியா கூட்டணிதான் வெல்வோம். அயோத்தி பால ராமர் இண்டியா கூட்டணிக்கு ஆதரவாக உள்ளார். ராமர் கைவிட்டுவிடுவாரோ என்பதால் தான் விவேகானந்தர் பாறைக்கு வருகிறார் பிரதமர் மோடி. ஆக, நிச்சயம் ராமர் மோடியிடம் இல்லை” என்றார்.


Watch – YouTube Click

What do you think?

ஆவின் பால் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு ஸ்டிரைக் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

தருமபுரம் மடாதிபதியின் ஆபாச வீடியோ விவகாரம் மூன்று பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு