in

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பேட்டி..

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பேட்டி..

உப்பு சத்தியாகிரக போராட்டத்தை கவுரவிக்கும் வகையில் வேதாரண்யத்தில் இருந்து தண்டிக்கு தனி ரயில் இயக்க வேண்டும் சென்னை சைதாப்பேட்டை, அசோக் நகர் ஆகிய அரசு பள்ளிகளில் மகாவிஷ்ணு கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஒரு சொற்பொழிவுயாற்றியுள்ளார் யாருடைய அனுமதியும் இல்லாமல் ஒரு சொற்பொழிவாளர் அரசு கல்வி நிலையங்கள் சொற்பொழிவு ஆற்றுவது என்பது இயலாது முடியாது.

மிக மோசமான சொற்பொழிவு நடைபெற்றிருக்கிறது. அவர் தற்பொழுது கைது செய்யப்பட்டிருக்கிறார். முதலமைச்சர் இந்த பிரச்சினையில் தலையிட்டு இருக்கிறார். நடவடிக்கை எல்லாம் வரவேற்கத்தக்க தான் என்று சொன்னாலும் கூட அரசு பள்ளிகளில் இப்படி பிற்போக்குத்தனமான விஞ்ஞானத்திற்கு புறம்பான மூட நம்பிக்கை பழக்க வழக்கங்களை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் ஒரு தனிப்பட்ட நபர் சொற்பொழிவு ஆற்றுவதற்கு எவ்வாறு அனுமதிக்கப்பட்டார்கள் என்கிற கேள்வி எழுகிறது கடுமையான கண்டனங்களும் எழுந்து இருக்கிறன இது இங்கு மட்டும்தான் நடைபெற்றதா?

தமிழ்நாட்டில் பல இடங்களிலும் ஏற்கனவே நடைபெற்று இருக்கிறதா? தொடர்ந்து நடைபெறுமா? என்ற கேள்விகள் எழுகிறது. ஆகவே கல்வியை காப்பாற்றப்பட அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

What do you think?

ஜெயின் சமூகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை உண்ணா நோன்பு

திருவாரூரில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 1000 கணக்கான ஆசிரியர்கள் பணியை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்