நிறுத்துங்கள்…இல்லனா சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்….VJ ரம்யா
விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியாக இருந்த ரம்யா தற்பொழுது ஒரு சில Channel நிகழ்ச்சிகளிலும், ஆடியோ லான்ச் மற்றும் ஒரு சில படங்களிலும் பங்கேற்று வருகிறார்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை கோபமாக வெளியிட்டுள்ளார்.
தொழில்நுட்பத்தில் ஒரு விஷயம் புதிதாக வந்தால் எந்தளவு நல்லதுக்கு பயன்படுத்துகிறோமோ அதே அளவுக்கு கெட்டதற்கும் பயன்படுத்துகிறோம்.
AI மூலமாக எனது வீடியோ மூன்றாவது முறையாக தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது இது சட்டத்திற்கு புறமான செயல் தனிப்பட்டவரின் உரிமைகளை மீறும் வகையில் செய்யப்பட்ட மோசமான சம்பவம்.
இதனை இப்பொழுதே நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.