in

திருத்துறைப்பூண்டியில் உலக போலியோ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

திருத்துறைப்பூண்டியில் உலக போலியோ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

அக்டோபர் 24 உலக போலியோ தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்திய போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார் பேரணியில் மாணவர்கள் ஐந்து வயதிற்குட்பட்ட அனைவருக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும் என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பழைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று புதிய பேருந்து நிலையம் வரை பேரணியாக சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
இன்ன நிகழ்வில் ரோட்டரி சங்கத்தினர் தன்னார்வலர்கள் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

What do you think?

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 24-10-2024

கூடங்குளம் அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட அணுக்கழிவுகள் அங்கே சேகரித்து வைப்பதன் மூலம் எந்தவித பாதிப்பும் இல்லை