in

டாக்டர் ராதாகிருஷ்ணன் போல் தலைப்பாகை அணிவித்து மரியாதை செய்த மாணவர்கள் 

டாக்டர் ராதாகிருஷ்ணன் போல் தலைப்பாகை அணிவித்து மரியாதை செய்த மாணவர்கள் 

 

வத்தலகுண்டில் ஆசிரியர் தின விழாவையொட்டி பள்ளி ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் போல் தலைப்பாகை அணிவித்து மரியாதை செய்த மாணவர்கள்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழாவையொட்டி பள்ளி ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் போல் தலைப்பாகை அணிவித்து ஆசிரியர்களை மாணவர்கள் கௌரவப்படுத்திய செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆசிரியர் தின விழாவையொட்டி பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் தங்களுக்கு கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கு உரிய மரியாதை அளிக்கும் விதமாக டாக்டர் ராதா கிருஷ்ணனின் தலைப்பாகை போன்று ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் தலைப்பாகை அணிவித்து பள்ளி மாணவர்கள் கௌரவப்படுத்தினர்.

தலைப்பாகை அணிந்து கம்பீரமாக நின்ற பள்ளி ஆசிரியர்களை டிரமஸ் வாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்த மாணவர்கள் உற்சாகமாக வரவேற்று ஆசிரியர் தின வாழ்த்துக்களை கூறி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பள்ளித் தாளாளர் அருட்தந்தை எட்வர்ட் பள்ளி முதல்வர் பால்ராஜ் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

What do you think?

வத்தலகுண்டில் விஜய் ரசிகர்கள் வாகனங்களில் கொடி கட்டி ஊர்வலமாக வந்து அட்ரா சிட்டி கார் பறிமுதல்

மயிலாடுதுறையில் மிளகாய் பொடி தூவி லேப்டாப் பறித்து சென்ற மர்ம கும்பல்