in

தொகுதிக்கான வெற்றி சான்றிதழினை சு. வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் பெற்றுக்கொண்டார்


Watch – YouTube Click

தொகுதிக்கான வெற்றி சான்றிதழினை சு. வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் பெற்றுக்கொண்டார்

 

மதுரை மக்களவைத் தொகுதியில் 2 ஆம் முறையாக 2,09,409 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சு.வெங்கடேசனுக்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெற்றி சான்றிதழை வழங்கினார்.

மதுரை மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்றது, அதன் வாக்கு எண்ணிக்கை மதுரை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது, தபால் வாக்கு எண்ணிக்கை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணிக்கை என வாக்குகள் தனி தனியாக எண்ணப்பட்டது

25 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே திமுக கூட்டணியின் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் முன்னிலை வகித்தார், முதல் 9 சுற்றுக்களில் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் 2 ஆம் இடம் பிடித்தார், 10 ஆவது சுற்றில் இருந்து அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் பின்னுக்கு தள்ளப்பட்டு பாஜக வேட்பாளர் இராம.ஶ்ரீனிவாசன் 2 ஆம் இடத்தை பிடித்தார், இறுதிச்சுற்றின் நிலவரப்படி 9,88,216 வாக்குகள் எண்ணப்பட்டன.

அதன்படி திமுக கூட்டணியின் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் 2,09,409 வாக்குகள் வித்தியாசத்தில் 4,30,323 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது, 2,20,914 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்தை பாஜக வேட்பாளர் இராம.ஶ்ரீனிவாசனும், 2,04,804 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தை அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனும், 92,879 வாக்குகள் பெற்று 4 ஆம் இடத்தை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யாதேவி பிடித்தனர்.

மேலும் நோட்டா 11,174 வாக்குகள் பெற்றுள்ளது, பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளை தவிர நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா தேவி உட்பட 18 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர், மதுரை மக்களவைத் தொகுதியில் 2 ஆம் முறையாக வெற்றி பெற்ற சு.வெங்கடேசனுக்கு மதுரை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதா வெற்றி சான்றிதழை வழங்கினார், நிகழ்வில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் தளபதி, துணை மேயர் நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர், முன்னதாக சு.வெங்கடேசன் அளித்த பேட்டியில் “எனக்கு கிடைத்த வெற்றி என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி, இந்தியா கூட்டணியின் அரசியல் நிலைப்பாட்டிற்கு கிடைத்துள்ள வெற்றியாக கருதுகிறேன்.

2019 நாடாளுமன்ற தேர்தலை விட 3 இல் 1 பங்கு வாக்கு கூடுதலாக கிடைத்துள்ளது, மதுரை மக்களின் அரசியல் உறுதிமிக்க வெளிப்பாடை காட்டுகிறது, தமிழகம் முழுவதும் பதிவான வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை இந்தியா கூட்டணி பெற்றுள்ளது, 50 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது அரசியல் வரலாற்றில் மிக முக்கிய செய்தியாக உள்ளது.

இந்தியா முழுக்க உள்ள அரசியல் சூழலில் தமிழ்நாடு மிக வலிமையாக உள்ளது, ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு அரசியல் முக்கியத்துவம் இருக்கும், 2024 தேர்தலின் தாக்கம் 2026 இல் இருக்கும், இந்தியாவில் மோடி ஆட்சி தொடரக்கூடாது என்பதற்காக மக்கள் தீர்ப்பளித்துள்ளார்கள், மக்கள் தீர்ப்பின் அரசியல் உள்ளடக்கத்தை இந்தியா கூட்டணியின் தலைவர்கள் நிறைவேற்றுவார்கள்” என கூறினார், பின்னர் அமைச்சர் மூர்த்தி கூறுகையில் “தமிழகத்தில் மூன்றாண்டு காலமாக திமுக செய்துள்ள சாதனைகளுக்காக மிகப்பெரிய வெற்றியை மக்கள் தந்துள்ளனர், மேலூர், மதுரை கிழக்கில் 1 இலட்சம் வாக்குகள் பெற்று தருவோம் என கூறினேன், அதன்படி 1 லட்சத்திற்கு அதிகமான வாக்குகள் பெற்றுத் தந்துள்ளோம், இந்தியா கூட்டணியில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக மக்கள் மக்கள் வாக்கு அளித்து உள்ளார்கள்” என கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

திருச்சி லோக்சபா தொகுதியில் துரை வைகோ வெற்றி

குழந்தை வேண்டாம்..ன்னு சொன்னேன் தேவயானி கேட்கவில்லை