in

கோயிலில் நகைகள் திருட்டிய வழக்கில் தமிழகம், புதுச்சேரி பிரபல திருடன் சுகுன்ராஜ் கைது


Watch – YouTube Click

கோயிலில் நகைகள் திருட்டிய வழக்கில் தமிழகம், புதுச்சேரி பிரபல திருடன் சுகுன்ராஜ் கைது

 

புதுச்சேரி உருளையன்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள உலகநாயகி அம்மன் கோவிலுக்குள் கடந்த 31ம் தேதி புகுந்த மர்ம நபர், கோவில் உண்டியல் உடைத்து காணிக்கை மற்றும் 50 கிராம் அம்மன் நகைகளை திருடிச் சென்றார்.

இதுகுறித்து உருளையன்பேட்டை காவல் துறையில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர். எந்த ஒரு கதவும் உடைக்காமல் எப்படி திருட்டு நடந்து இருக்கும் என போலீசார் நடத்தினர். கோயிலுக்குள் இருந்த சிசிடிவி கேமிராக்கள் அனைத்தும் மேல் பக்கமாக திருப்பி விடப்பட்டிருந்தது.

மேலும் சிசிடிவியை ஆய்வு செய்த போது அது சில மாதங்களாய் இயங்கவில்லை என்ற தகவல் போலீசாருக்கு ஏமாற்றத்தை தந்தது இருப்பினும்

கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். காவல்துறையின் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது சோதனை செய்தனர்.

இதுபோன்ற சம்பவம் கடலூரில் இரு முறை நடந்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கு விரைந்து கடலுார் குத்துப்பாக்கம், முருகன்கோவில் தெருவைச் சேர்ந்த சுகுன்ராஜ், 26; கோவில் திருட்டில் ஈடுப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கைரேகை பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தபோது, உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட நெல்லித்தோப்பு சிக்னல் அருந்ததி நகர் முத்தாலம்மன் கோவில், அய்யனார் நகரில் உள்ள முருகன் கோவிலிலும், பாகூரில் ஒரு கோவில், கடலுார் ஒ.டி.யில் இரு கோவில் என 6 கோவில்களில் உண்டியல் உடைத்து திருடியது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் கிட்லா சத்தியநாராயணன் உத்தரவின்பேரில், சிறப்பு அதிரடிப்படை மற்றும் கிழக்கு கிரைம் போலீசார் சுகுன்ராஜ் இருக்கும் இடத்தை தேடினர். சேலத்தில் மறைந்திருந்திருந்த சுகுன்ராஜை போலீசார் பிடித்து புதுச்சேரி கொண்டு வந்தனர். சுகுன்ராஜிடம் இருந்து, 50 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சுகுன்ராஜ் நீதிபதி முன் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இவன் மீது ஏற்கனவே 3 வழிப்பறி வழக்குகள், 3 கோயில்களில் திருட்டு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.

முன்னதாக, சுகுன்ராஜ் கோவிலுக்குள் எப்படி நுழைந்து திருடினார் என்பதை போலீசார் முன்னிலையில் நடித்து காண்பித்தார்.


Watch – YouTube Click

What do you think?

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

புதுச்சேரி சூரியன் எப் எம் சார்பில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் இசை கச்சேரி நடைபெற்றது