in

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்


Watch – YouTube Click

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

 

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வலுக்கட்டாயப் படுத்தி விருப்ப ஓய்வு பெற செய்யக்கூடாது மாஞ்சோலையில் இயங்கும் கல்வி நிறுவனங்களை மூடுவதற்கான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நெல்லை மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிடுவது என திமுக அதிமுக பாஜக உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் கலந்து கொண்ட அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது மேலும் அனைத்து கட்சிகள் சார்பில் மாஞ்சோலை பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து அடுத்த கட்ட முடிவு குறித்து நடவடிக்கை எடுப்பது என அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, நாலு முத்து, ஊத்து, காக்காச்சி என பல்வேறு மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இப்பகுதியில் தேயிலை தோட்டங்கள் அதிக அளவு அமைந்துள்ளது இங்கு சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருவதுடன் தேயிலை தோட்டங்களிலும் பணி செய்து வருகின்றனர்.

இப்பகுதி சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த போது 1929 ஆம் ஆண்டு தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்கு 99 ஆண்டு கால குத்தகைக்கு இந்த இடம் கொடுக்கப்பட்டது.

இந்த நிறுவன மூலம் அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் பராமரிக்கப்பட்டு சுமார் 2000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் வரும் 2028 ஆம் ஆண்டுடன் அந்த நிறுவனத்திற்கான குத்தகை ஒப்பந்தம் நிறைவு பெறும் நிலையில் அந்த இடத்தை ராயத்து வரி பட்டா வழங்க கோரி நீதிமன்றத்தில் பிபிடிசி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் என வழக்கு தொடர்ந்த நிலையில் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த சூழலில் ஜூன் மாத இறுதிக்குள் தேயிலைத் தோட்டத்தில் பணி செய்யும் தொழிலாளர்களை காலி செய்வதற்கு தேயிலைத் தோட்ட நிறுவனம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது தொழிலாளர்களை விருப்ப ஓய்வு பெறுவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வரும் 15ஆம் தேதிக்குள் அவர்களை அதில் கையெழுத்திட கட்டாயப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் அப்பகுதியில் பல தலைமுறைகளாக பணி செய்து வரும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் செய்வது அறியாத திகைத்து வருகின்றனர் இந்த சூழலில் மாஞ்சோலை தேயிலை தோட்டம் மக்கள் நல சங்கம் சார்பில் தேயிலை தோட்ட நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக, கம்யூனிஸ்ட் இயக்கங்கள் விடுதலை சிறுத்தை கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் சமூக இயக்கங்கள் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் .இதில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான வாழ்வாதாரத்தை காக்க எடுக்கப்படும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட நிர்வாகம் வலுக்கட்டாயப் படுத்தி தொழிலாளர்களிடம் விருப்ப ஓய்வு கடிதம் பெறுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ,2028 ஆம் ஆண்டு வரை காளவாசல் இருந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பறிக்கும் வண்ணம் செயல்படும் தேயிலை தோட்ட நிர்வாகத்தை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னால் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன் மாஞ்சோலை தேயிலை தோட்ட நிர்வாகம் பல தலைமுறைகளாக வாழும் மக்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை கண்டனத்திற்குரியது மாஞ்சோலை பகுதியில் தெரியலைத் தொட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக நிறுவப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்திருப்பதும் படிக்கும் மாணவர்களை வெளியே சென்று படிக்க வற்புறுத்தும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து உறுதியான முடிவெடுக்க வரும் ஏழாம் தேதி அனைத்து கட்சியினர் சார்பில் கோரிக்கை வைக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அனைத்து கட்சியினரும் ஒன்று திரண்டு வரும் எட்டாம் தேதி மாஞ்சோலை பகுதியில் வசிக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்களை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி பி எ மைதீன் கான் சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் வகாப் சதன், திருமலை குமார் மற்றும் பல்வேறு அரசியல் இயக்கங்களைச் சார்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.


Watch – YouTube Click

What do you think?

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்புகள் தானம்

விமான நிலையத்தில் கட்டாய வசூலில் ஈடுபடுவதாக வட மாநில ஊழியர்களிடம் ஓட்டுநர்கள் வாக்குவாதம்