in

மயிலம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா

மயிலம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா

 

திண்டிவனம் அருகே உள்ள மயிலம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருவிழா வெகு விமர்சையாக தொடங்கியது. பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.

தைப்பூசம் என்பது தென் இந்தியர்கள் வாழும் நாடுகளில் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள மயிலத்தில் பிரசித்திபெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு முருகன் வள்ளி, தெய்வானையுடன் மயில் வடிவ மலையில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், காலை 6 மணிக்கு 1008 சங்கு அபிஷேகமும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முருகன் தங்க கவசம் அணிந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

 

தைப்பூசத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி காவடி எடுத்தும், பால்குடங்களை சுமந்தபடி ஊர்வலமாக வந்தும், மொட்டை அடித்தும் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இதில் விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்ட சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.

What do you think?

பாடகர் எஸ்பிபி பாலசுப்ரமணியம் சாலை என பெயர் மாற்றம்

பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது