in

தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு தவாக தலைவர் வேல்முருகன் அடுக்கடுக்காக கேள்வி?

தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு தவாக தலைவர் வேல்முருகன் அடுக்கடுக்காக கேள்வி?

 

தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு தவாக தலைவர் வேல்முருகன் அடுக்கடுக்காக கேள்வி? விஜய்யிடம் பதில் உள்ளதா என காட்டம்

தன் சொந்தக் கட்சியின் மாநாட்டின் பந்தல்கால் நடும் இந்நிகழ்விற்கு கூட வராமல் நேரடியாக முதலமைச்சர் அரியணை வேண்டும் என கேட்கும் நடிகர் விஜய்க்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் பதிலளிப்பார்கள் – வேல் முருகன் பேட்டி

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மத்திய மண்டல நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,

நவம்பர் டிசம்பர் மாதங்களில் தான் அதிக மழை பெய்யும். ஆனால் தமிழகத்தில் தற்பொழுது அதிக மழை பெய்து வருகிறது எனவே போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தயாராக இருக்க வேண்டும்.

மழை அதிகம் பெய்யாத போதே தமிழகத்தில் 5 உயிர்கள் பலியாகி உள்ளது. இதை ஏற்று கொள்ள முடியாதது.

சம்மந்தப்பட்ட துறைகள் சரியாக செயல்படவில்லையோ என தோன்றுகிறது. இதற்கு துறை செயலாளர்கள் தான் பொறுப்பேற்க செய்ய வேண்டும்.

தமிழக சிறைகளில் மூன்றாண்டுகளில் நூறு கைதிகள் பலியாகி உள்ளனர். இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

எவ்வளவு பெரிய குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தான் தண்டனை பெற்று தர வேண்டும். அவர்களை என்கவுண்டர் செய்ய கூடாது. காவல் துறையே நீதிபதிகளாக மாற கூடாது.

ஈவு இரக்கமற்ற குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது உண்மை தான் அது சட்டத்தின் துணை கொண்டு தான் இருக்க வேண்டும்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் உரிய சமூக நீதி சமமாக கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒன்றிய அரசுதான் ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் எனக் கூறி தமிழக அரசு தப்பித்து கொள்வதை ஏற்று கொள்ள முடியாது.

ஜாதிவாரி கண்க்கெடுப்பை மாநில அரசுகளைக் நடத்த எந்த தடையும் இல்லை.

ஒன்றிய அரசு பதவி இடங்களில் இந்திக்காரர்கள் திணிக்கப்படுகிறார்கள்.

ஒன்றிய அரசின் பணிகளில் 90 சதவீதம் மாநில மக்களுக்கு தான் பணி வழங்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள ஒன்றிய அரசின் அலுவலகங்களில் இந்திக்காரர்களை முழுவதுமாக புகுத்துவது ஜனநாயக படுகொலை.

தமிழக துணை முதல்வர் உதயநிதியின் தனி செயலாளரும் வடமாநில நபர் தான், தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்காதது ஏன் என கண்டனம் தெரிவித்தார்.

தமிழகத்தின் உரிமை மறுக்கப்படும் போது தமிழக அரசு மெளனமாக இருக்கிறது.

செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு துணை தலைவராக மருத்துவர் சுதா சேசன் நியமித்திருப்பது கண்டிக்கத்தக்கது. அவரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அந்தப் பதவியில் ஒரு மருத்துவரை நியமிப்பது தமிழகத்தில் உள்ள தமிழ் அறிஞர்களை அவமதிப்பது போன்று தான்

மாட்டுத் தொழுவத்தில் படுத்தால் புற்றுநோய் சரியாகிவிடும் என ஒன்றிய அமைச்சர் ஒருவர் பேசியுள்ளார் இவர்களைப் போன்ற அறிவாளிகளை வைத்து தான் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். இது போன்ற பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களை பேசும் அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

அணு கனிம சுரங்க திட்டம் கன்னியாகுமரியில் நிறுவ ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதை தமிழக அனுமதிக்க கூடாது.

சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக தமிழக அரசு நிற்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை வெளி நாடு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. எத்தனை பேருக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

நீட் தேர்வுக்கு செல்லும் மாணவ மாணவிகள் தொடர்ந்து அவமதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர் அவ்வாறு தமிழகத்தில் அடுத்த முறையும் நடைபெற்றால் நீட் தேர்வு மையங்களை அடித்து நொறுக்குவோம்.

தமிழகத்தில் இதற்கு முன்பு பல நடிகர்கள் கட்சி தொடங்கிவிட்டனர் அவர்கள் கட்சிகள் என்ன ஆனது என்பது குறித்து அனைவருக்கும் தெரியும் நடிகர் விஜய் தொடங்கி உள்ள கட்சி குறித்து பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நடிகர் விஜய் நேரடியாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செல்ல நினைக்கிறார். மக்கள் பிரச்சினை குறித்து விஜயின் கருத்து என்ன என்பது குறித்து அவரிடம் கேட்க வேண்டும் அதற்கு விஜய் தடங்கல் இல்லாமல் பதில் சொல்லட்டும்.
ஹைட்ரோ கார்பன் மீத்தேன் குறித்து நடிகர் விஜயின் கருத்து என்ன? முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து விஜயின் கருத்து என்ன? மதுவிலக்கு குறித்து விஜயின் கருத்து என்ன?

இது போன்று நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நடிகர் விஜய்யின் கருத்து என்ன என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். களத்திற்கு வந்து ஒரு பத்தாண்டுகள் பணியாற்றி விட்டு அதன் பின் தனக்கு முதலமைச்சராக வாய்ப்பு கொடுங்கள் என கேட்டால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் இதை எதையும் நான் செய்ய மாட்டேன் சொந்தக் கட்சியின் மாநாட்டிற்கு கூட பந்தல் கால் வைக்கும் நிகழ்ச்சிக்கு கூட வரமாட்டேன் நேரடியாக முதலமைச்சர் அரியணிக்கு தான் வருவேன் என கூறினால் தமிழக மக்கள் தான் எஜமானர்கள் அதற்குரிய பதிலை அவர்கள் தேர்தலில் அளிப்பார்கள் என்றார்.

What do you think?

பழனி மலைக்கோவிலுக்கு மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சாமி தரிசனம்

மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் புகார் மனு