in

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நாட்டின் 78 வது சுதந்திர தினவிழா

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நாட்டின் 78 வது சுதந்திர தினவிழா

 

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நாட்டின் 78 வது சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நாட்டின் 78 வது சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் திறந்த வாகனத்தில் சென்று காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர்படை ஆகியோரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

பின்னர் அவர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார். பின்னர் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 101 காவல் துறையினருக்கு பதக்கங்களும், மாவட்ட நிலை அலுவர்கள் 20 பேருக்கு நற்சான்றிதழ்களும் மேலும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட 33 துறைகளின் கீழ் சிறப்பாக பணியாற்றிய 309 அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கெளரவித்தார்.

பின்னர் பள்ளி கல்லூரி மாணவர்களின் தேசப்பற்று மிக்க கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

What do you think?

நாகையில் நடைபெற்ற 78 வது சுதந்திர தின விழா

புதுச்சேரி கடலில் விசைப்படகுகளுடன் மீனவர்கள் தேசியக்கொடி அணிவகுப்பு