in

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பாஜக யுவமோச்சா பலர் கைது

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பாஜக யுவமோச்சா பலர் கைது

 

திருப்பதி கோவிலில் லட்டு உள்ளிட்ட பிரசாதங்களை தயார் செய்ய விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய்யை சப்ளை செய்த விவகாரத்தில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பாஜக யுவமோச்சா பலர் கைது.

ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் திருப்பதி கோவிலில் லட்டு உள்ளிட்ட பிரசாதங்களை தயார் செய்ய சப்ளை செய்யப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் விஜயவாடா அருகே தாடேபள்ளியில் உள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை இன்று திடீரென்று பாஜக யுவ மோட்சா பிரிவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தின் போது ஜெகன்மோகன் ரெட்டி, அவருடைய சித்தப்பா தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி ஆகியோருக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர்.

இந்த நிலையில் அங்கு வந்து சேர்ந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

What do you think?

தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் அருள்மிகு ஶ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை சிறப்பு அலங்காரம் தீபாராதனை

திருச்சி ஜங்ஷன் பழைய பாலம் 10 நாட்களில் மூடப்படுகிறது- அமைச்சர் நேரு பேட்டி