in

தனது மகனை காணவில்லை என கூறி சிறுவனின் தாயார் பிரியா கீழவளவு காவல் நிலையத்தில் புகார்


Watch – YouTube Click

தனது மகனை காணவில்லை என கூறி சிறுவனின் தாயார் பிரியா கீழவளவு காவல்நிலையத்தில் புகார்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தர்மசாணம்பட்டி பகுதியை சேர்ந்த இலங்கை தமிழரான பிரியா – இவர் கணவனை பிரிந்து தற்போது திருப்பூரில் வசித்துவருகிறார். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு சில நாட்களுக்கு முன்பாக கஞ்சா விற்க கூறி சிலர் கத்தியால் தாக்கி சிகிச்சை பெற்ற நிலையில் பாதுகாப்பு கருதி தன்னுடன் தங்கவைத்து விடுதியில் சேர்ந்து படித்துவருகிறார்.

இந்நிலையில் பிரியாவின் இளைய மகனான 10 வயதுடைய லோஹித் பிரியாவின் பெரியப்பாவுடன் மதுரையில் வசித்துவருகிறார். இதனிடையே பிரியாவின் மகனான லோஹித் கடந்த 23 ஆம் தேதியன்று தாத்தா வீட்டில் இருந்தபோது அதிகாலை இருந்து காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து தனது மகனை காணவில்லை என கூறி சிறுவனின் தாயார் பிரியா கீழவளவு காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார்.

அப்போது காவல்துறையினர் புகாரை வாங்க மறுத்ததாக கூறியும், தனது மகன் காணாமல் போய் 4 நாட்கள் ஆகியும் கிடைக்காதததால் தனது மகனை கண்டுபிடித்து தரகோரியும் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளித்தார்.

தனது 10 வயது மகனை கஞ்சா விற்க வைப்பதற்காக சிலர் கடத்தியிருக்கலாம் என்ற அச்சம் இருப்பதாகவும், தனது மகன் காணாமல் போனது குறித்த புகாரை கீழவளவு காவல்துறையினர் வாங்க மறுப்பதால் தனது மகனின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக தாயார் பிரியா குற்றம்சாட்டினார்.

ஏற்கனவே மூத்த மகனை கஞ்சா விற்க தூண்டியபோது மறுத்த நிலையில் தனது பெரியப்பாவின் உறவினர்கள் தனது மூத்த மகனை கத்தியால் குத்தி சிகிச்சை பெற்று மீண்டுவந்த நிலையில் தற்போது இளைய மகனும் காணாமல் போனது அச்சமாக இருப்பதாக தெரிவித்த பிரியா தனது பெரியப்பா மீதான போக்சோ வழக்கில் சாட்சியாக இருக்க பிரியா என்ற பெயருக்கு பதிலாக மலர்ஜோதி என்ற பெயரில் வழக்கில் ஆஜராக வேண்டும் என கீழவளவு காவல்துறையினர் தொடர்ந்து மிரட்டுவதாகவும் குற்றசம்சாட்டினர்.


Watch – YouTube Click

What do you think?

இன்றைய வானிலை அறிக்கை | Today Weather Report 27.06.2024

வன்னியர் இட ஒதுக்கட்டை தர மறுத்தால் மாநிலம் தழுவிய போராட்டம் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு