in

ஒப்பந்த ஊழியர்கள் வருடாந்திர ஊதிய உயர்வை வழங்கக்கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

ஒப்பந்த ஊழியர்கள் வருடாந்திர ஊதிய உயர்வை வழங்கக்கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

 

புதுச்சேரி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் வருடாந்திர ஊதிய உயர்வை வழங்கக்கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 13-ஆண்டுகளாக 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும் தற்போது வரை மாதம் ஊதியமாக ரூ.13 ஆயிரம் பெற்று வருகின்றனர்.
இதனிடையே ஆண்டுதோறும் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்படும் வருடாந்திர ஊதிய உயர்வு நடப்பாண்டிற்கு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் வருடாந்திர ஊதிய உயர்வை வழங்க கோரியம், சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்ததன் படி தனியார் தொழிலாளர்களுக்கு அறிவித்த ஊதியத்தை வழங்கக்கோரி 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நோயாளிகள் பாதிக்காத வகையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

What do you think?

ஆவணி அவிட்டம் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் 100க்கும் மேற்பட்டோர் பூணூல் போட்டனர்

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் ஆவணி மாத பௌர்ணமி கிரிவலம்