in

வெற்றி பெற்ற காங் எம்பி வைத்திலிங்கத்திற்கு மாவட்ட ஆட்சியர் வெற்றி சான்றிதழை வழங்கினார்


Watch – YouTube Click

வெற்றி பெற்ற காங் எம்பி வைத்திலிங்கத்திற்கு மாவட்ட ஆட்சியர் வெற்றி சான்றிதழை வழங்கினார்

 

இந்திய நாட்டுக்கான பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடந்தது. இதில் முதல்கட்ட தேர்தலில் தமிழகம், புதுச்சேரிக்கு தேர்தல் நடந்தது. புதுச்சேரி மக்களவை தொகுதி தேர்தலில் பாஜக சார்பில் அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் எம்பி உட்பட 26 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

மொத்தமுள்ள 10 லட்சத்து 23 ஆயிரத்து 699 வாக்காளர்களில் 8 லட்சத்து 7 ஆயிரத்து 724 பேர் வாக்களித்தனர். 78.90 சதவீத வாக்குகள் பதிவானது. இந்த வாக்குகள் அனைத்தும் இன்று காலை எண்ணப்பட்டன.

காலை முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூன்று சுற்றுகளாக சட்டமன்றத்தில் 30 தொகுதிக்கான வாக்குகள் எண்ணப்பட்டன.
இரவு 8 மணி வரை வாக்கு எண்ணிக்கை நீடித்தது.
முதல் கட்டத்தில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் முன்னிலையில் இருந்தார்.

புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் யானாம், இந்திரா நகர் தவிர அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர் மற்ற அனைத்து வேட்பாளர விட கூடுதலான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

வைத்திலிங்கம்(காங்)-4,26,005
நமச்சிவாயம்(பாஜக)-2,89,489
வித்தியாசம்..1,36,516

மேனகா(நாம் தமிழர்)-39,603
தமிழ்செல்வம்(அதிமுக)-25,165
நோட்டா-9679

இந்த தேர்தலில் அமைச்சர் வாழ்த்தை தவிர அதிமுக நாம் தமிழர் கட்சி உட்பட 24 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். முதலமைச்சர், அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோரின் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றது.

வெற்றி பெற்ற வைத்திலிங்கத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் வெற்றி சான்றிதழை வழங்கினார்.

வெற்றி பெற்ற காங் எம்பி வைத்திலிங்கம் கூறுகையில், ராகுலுக்கு புதுச்சேரி மக்கள் முழுமையான ஆதரவை தந்துள்ளனர் என்றும் ஜனநாயகத்தை முழுமையாக காக்க வேண்டும் என்பதற்காக இந்த தேர்தல் விடை மக்களால் அளிக்கப்பட்டுள்ளது.ஆங்கிலேயர்களைப் போல பாரதிய ஜனதாவை மக்கள் விரட்டி இருக்கிறார்கள். கல்வி திட்டம், மின்சார் தனியார் மையம் என பல திட்டங்கள் மக்கள் விரும்பாமலே திணிக்கப்பட்டது அதற்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.சட்டமன்ற தேர்தலில் ஆளுங் கட்சி வெற்றி பெற்ற அனைத்து தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மக்கள் வாக்களித்துள்ளனர் என்றும் கூறினார்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில்„

பேட்டி…முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், புதுச்சேரி அரசில் நடைபெறும் ஊழல்களை பலமுறை சுட்டிக்காட்டிட்டும் முதலமைச்சர், அமைச்சர்கள் என யாரும் பதில் அளிக்கவில்லை. அவர்களுக்கு மக்கள் தற்போது பதில் அளித்துள்ளனர் என கூறினார்.

முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் தார்மீக பொறுப்பேற்று தங்களுடைய பதவியில் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் நாராயணசாமி தெரிவித்தார்.

பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் பதவி விலக வேண்டும்.கூட்டணி இல்லாமல் பாஜகவில் ஆட்சி அமைக்க முடியாது. நரேந்திர மோடி ஒரு சர்வாதிகாரி. அதனால் பாஜக மூத்த தலைவர்கள் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆக்க கூடாது என நாராயணசாமி தெரிவித்தார்..


Watch – YouTube Click

What do you think?

நாகை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வெற்றி பெற்ற செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை

வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் சி.வெ கணேசன்