in

வைர விழா ஆண்டை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் உரையை வெளியிட்ட மாவட்ட ஆட்சியாளர்

வைர விழா ஆண்டை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் உரையை வெளியிட்ட மாவட்ட ஆட்சியாளர்

 

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க வைர விழா ஆண்டை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் உரையை வெளியிட்ட மாவட்ட ஆட்சியாளர்

தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம் வைர விழா ஆண்டை முன்னிட்டு மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள தலைமை அஞ்சலக அலுவலக வளாகத்தில் சிறப்பு அஞ்சல் உரை வெளியிட்டு விழா நடைபெற்றது.

விழாவில் மதுரை மாவட்ட ஆட்சியாளர் சங்கீதா அவர்கள் மற்றும் தென்மண்டல அஞ்சல் தலைவர் ஜெயசங்கர் மற்றும் வருவாய்த்துறை சங்க மாநில தலைவர் முருகைய்யன் உட்பட தபால் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியாளர் சங்கீதா அவர்கள் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க வைரவிழா ஆண்டை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டார்.

தொடர்ந்து அஞ்சல் துறை சார்பாக மாவட்ட ஆட்சியாளரின் புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் தலை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

What do you think?

100 நாள் வேலை திட்டத்தில் வேலை நாட்கள் உயர்த்தி வழங்கப்படும் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தகவல்

அனுமதியின்றி சவுடு மண் எடுத்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்