in

புரட்சி பாரதம் கட்சியின் நிர்வாகி புதிய புரட்சிக் கழகம் என்ற புதிய கட்சி தொடங்கினார்


Watch – YouTube Click

புரட்சி பாரதம் கட்சியின் நிர்வாகி புதிய புரட்சிக் கழகம் என்ற புதிய கட்சி தொடங்கினார்

 

புரட்சி பாரதம் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் அக்கட்சியில் இருந்து விலகி புதிய புரட்சிக் கழகம் என்ற புதிய கட்சி தொடங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் புரட்சி பாரதம் கட்சியின் தலைவராக இருந்தவர் ஓதியூரை பகுதியை சேர்ந்தவரான O.E.சங்கர்.

இவர் புரட்சி பாரதம் கட்சியில் தனக்கான முழு அங்கீகாரத்தை கட்சி தரவில்லை எனக் கூறி புரட்சி பாரதம் கட்சியை விட்டு விலகினார்.

ஓ .இ. சங்கர், தனது ஆதரவாளர்களுடன் செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட மலைநகர் பகுதியில் உள்ள தாத்தா ரெட்டை மலை சீனிவாசன் நினைவு மண்டபத்தில் ரெட்டமலை சீனிவாசன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு புதிய புரட்சி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். புதிய புரட்சிக் கழகத்திற்கான கட்சிக்கொடியினையும் வெளியிட்டார்.

இக்கட்சியின் தொடக்க விழாவிற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தை கட்சியின் மண்டல செயலாளர் ஆதவன், மாவட்டச் செயலாளர் தமிழினி ஆகியோர் புதிய புரட்சி கழகத்தின் நிறுவனத் தலைவர் ஓ. இ. சங்கருக்கு சார்பு அணிவித்த, புத்தகங்களை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, தனது ஆதரவாளர்களுக்கு புரட்சி பாரதம் கட்சியை விட்டு விலகியதற்கான காரணத்தை கூறி புதிய கட்சி தொடங்குவதற்கான நோக்கம், கொள்கைமற் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தல் உள்ளிட்டவை குறித்து எடுத்துக் கூறினார்.

அதன் பின்னர், அச்சரப்பாக்கம் எலப்பாக்கம் கூட்டு சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த கட்சியின் தொடக்க விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

மயிலாடுதுறையில் பத்தாம் பகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா

திண்டுக்கல்லில் தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன் குமார் பேட்டி