பிரபல இயக்குனர் நேற்று சென்னையில் காலமானார்
57 வயதாகும் பிரபல இயக்குனர் நேற்று சென்னையில் காலமானார். ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ஏப்ரல் மாதத்தில் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி.
புதுக்கோட்டையில் இருந்த சரவணன், மெர்குரி பூக்கள், கிழக்கு கடல் சாலை ஆகிய படங்களையும் இயக்கி உள்ளார்.
இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் நடிகராகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மறைந்த இயக்குனர் ஸ்டான்லி இன் உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
இவரின் மறைவுக்கு திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து விடுகின்றனர்.