in

பழுதடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை சரி செய்யும் பணிக்காக மாவட்ட பெங்களூருவிற்கு அனுப்பப்பட்டது


Watch – YouTube Click

பழுதடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை சரி செய்யும் பணிக்காக மாவட்ட பெங்களூருவிற்கு அனுப்பப்பட்டது

 

நாடாளுமன்றத் தேர்தல் நிறைவு பெற்றுள்ள நிலையில் பழுதடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை சரி செய்யும் பணிக்காக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பெங்களூருவிற்கு அனுப்பி வைத்தார்.

7 கட்டங்களாக 18வது நாடாளுமன்ற தேர்தல் நிறைவு பெற்ற நிலையில் திருச்சி மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் வாக்குப்பதிவு தினத்தன்று பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் பூட்டி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தேர்தலில் பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரங்கள்,
வி.வி.பேட் மற்றும் கண்ட்ரோல் யூனிட்டுகள் போன்றவற்றில்
பழுதான இயந்திரங்களை சரி செய்வதற்காக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறந்து சரி செய்யும் பணிக்காக பெங்களூருவிற்கு அனுப்பி வைத்தார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவல வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் இருந்து பழுதான 50வாக்குப்பதிவு இயந்திரங்கள், 60கண்ட்ரோல் யூனிட்டுக்கள், 112வி.வி.பேட் இயந்திரங்கள் இன்று பெங்களூருவில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி செய்யும் இடத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாக கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் ஒட்டுமில்லை, உறவுமில்லை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

சிரஞ்சீவியின் முன்னாள் மருமகன் மறைவு