in

பிரபல இயக்குநர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்

பிரபல இயக்குநர் மரணம் அதிர்ச்சியில் திரைஉலகம்

 

ராஜ்கிரண் நடித்த மாணிக்கம் படத்தின் முலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் சூர்யபிரகாஷ், அதன் பிறகு சரத்குமார், வடிவேலு மற்றும் மீனா... கூட்டணியில் உருவான படம் மாயி.

இப்படத்தில் இடம் பெற்ற வாம்மா மின்னல் என்ற காமெடியை இன்று வரை ரசிகர்கலால் மறக்க முடியாத அளவிற்கு செம்ம காமெடி track…கை கொடுத்தவர் இயக்குனர் சூர்யபிரகாஷ்.

அதன் பிறகு இவர் இயக்கத்தில் வந்த படங்கள் சொல்லி கொள்ளும் அளவிற்கு வெற்றி பெற இல்லை . கடைசியாக இவர் இயக்கி வருசநாடு என்ற படம் இன்னும் வெளி வராத நிலையில் இன்று காலை இயக்குனர் சூர்யபிரகாஷ் மாரடைப்பு காரணமாக அவரது வீட்டில் உயிரிழந்தார்.

இவரின் மறைவிற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்த நிலையில் நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் தளத்தில் ,

“எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் போன்ற வெற்றி படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்ய பிரகாஷ் இன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி, வேதனையும் , அதிர்ச்சியையும் அளிக்கிறது.

நேற்றைய தினம்கூட அவருடன் பேசிக்கொண்டிருந்த நிலையில் நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என வெளிட்டுயுள்ளார்.

What do you think?

திருவாரூர் தெப்பத் திருவிழாவின் போது சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்து

தனியார் நிறுவனத்தோடு கைகோர்த்துக்கொண்டு ஊழல் மாநில கழக தலைவர் எஸ்.பி. சிவக்குமார்