in

மேலூரில் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைப்பு

மேலூரில் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைப்பு

 

மேலூரில் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைப்பு: படிக்கட்டில் நின்றுக்கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்த வாலிபரை இறக்கி விட்ட நிலையில் வெறிச் செயல்…

மதுரை மாவட்டம் மேலூருக்கு, சிவகங்கையில் இருந்து பயணிகளுடன் அரசு டவுன் பேருந்து வந்து கொண்டிருந்தது.

இதில் 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் படிக்கட்டில் நின்றுக்கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளார்.

இதனையடுத்து பேருந்தின் நடத்துநர் மற்றும் பயணிகள் அவரை எச்சரித்தும், மீண்டும் படிக்கட்டில் நின்றுக்கொண்டு பயணிக்கவே, அந்த இளைஞரை இடைய மேலூர் அருகே உசிலம்பட்டி பகுதியில் நடத்துநர் இறக்கி விட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் இருசக்கர வாகனத்தில் பேருந்தை பின் தொடர்ந்து வந்து, மேலூர் ஆர்.சி பள்ளி அருகே பேருந்தை வழி மறித்து கல்லால் எரிந்து பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி சென்றுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்த மேலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன், பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைந்த இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்…

What do you think?

இரட்டை மாலை திருக்கோவில் தம்புரான் விழா எருது ஓட்டம்

நாமக்கல்லை அடுத்த நன்செய் இடையாறு திருவேலீஸ்வர் சிவ ஆலயத்தில் மாணிக்கவாசகர் குரு பூஜை