in

புனித ஆரோக்கிய அன்னைக்கு தங்ககிரீடத்தை கொண்டு முடி சூட்டப்பட்டது


Watch – YouTube Click

புனித ஆரோக்கிய அன்னைக்கு தங்ககிரீடத்தை கொண்டு முடி சூட்டப்பட்டது

 

வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற மாதாவிற்கு தங்க கிரீடத்தால் முடிசூட்டும் நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பங்கேற்பு.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. பேராலயத்தில் மே மாதம் மாதாவிற்கு உகந்த மாதமாக கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதனையொட்டி கடந்த 6-ந்தேதி முதல் சனிக்கிழமை தோறும் மாதா கோவிலில் திருப்பலி, தேர்பவணி மற்றும் நிவ்ய நற்கருணை ஆசிர் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சிமான மாதாவிற்கு முடிசூட்டும் நிகழ்ச்சி மாதாகுளத்தில் நடைபெற்றது. இதில் தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.

பின்னர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மாதாவின் திருவுருவச்சிலைக்கு தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் அவர்கள் தலைமையில் மாதாவின் உருவத்திற்கு தங்ககிரீடத்தை கொண்டு முடி சூட்டினார்.

அதை தொடர்ந்து தேர்பவனி திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன இதில் தமிழகம் மட்டுமல்ல கேரளா ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

காட்டுயானைகள் முகாமிட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

பாமாயில் தொழிற்சாலையால் விவசாயம் கேள்விக்குறி கிராம மக்கள் போராட்டம்