in

சங்கரன்பந்தலில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம்.

சங்கரன்பந்தலில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சங்கரன்பந்தலில் உள்ள துணை மீன் பொறியாளர் அலுவலகத்தை இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதில் சங்கரன்பந்தலில் குறைவாக வரும் மின்சாரத்தை சரி செய்து மக்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கிட வேண்டும் குடியிருக்கும் அனைவருக்கும் மின் இணைப்பு உடனே வழங்கிட வேண்டும் இலுப்பூர் வடக்கு தெரு சாலை நடுவில் இருக்கும் மின்கம்பத்தை அகற்றி மாற்றி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மின்கட்டணம் உயர்வை கண்டித்தும் சங்கரன்பந்தல் கடைவீதியில் இருந்து ஊர்வலமாக வந்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் ஏராளமானோர் கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் பொறையார் போலீசார் மின் வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர் கோரிக்கை ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளனர்.

What do you think?

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்போனில் வெடிகுண்டு மிரட்டல்

வருவாய்த் துறை மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் மசோதா கட்சி சார்பாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்