in

திருத்துறைப்பூண்டி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி அருகே கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை தொடங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொத்தமங்கலம் ஊராட்சி 8 வது வார்டு கடியச்சேரி மெயின் ரோடு காவேரி நகர் பகுதியில் சாலை கடந்த 2021 இல் தொடங்கப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது இதுகுறித்து பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடமும் மனு அளித்தும் இன்று வரையும் சாலை பணி நிறைவு பெறாததை கண்டித்து உடனடியாக சாலை போட்டு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுமக்கள் ஏராளமானோர் பள்ளங்கோவில் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சாலை விரைவில் சரி செய்து தரப்படும் என தெரிவித்ததன் பேரில் தற்காலிகமாக சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது

இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அரை மணி நேரத்திற்கு மேலாக திருத்துறைப்பூண்டி- மன்னார்குடி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

What do you think?

மதுவிலக்கு அமல் படுத்த கூட்டணியில் உள்ள திருமாவளவன் அழுத்தத்தை கொடுக்க வேண்டும் எல் முருகன்

ரூ.70 ஆயிரம் கோடி தமிழக அரசிடம் உள்ளது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மயில் தகவல்.