நாமக்கல் அடுத்தசேந்தமங்கலம் பெருமாள் கோயிலில் மாசி மக தேர்த்திருவிழா பெருமாள் திருக்கல்யாண வைபவம்
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பழைய பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. அதில், ஆண்டுதோறும் மாசிமாதம் கோயிலில் தேர்த்திருவிழா நடைபெறும். மாசி மக தேர்த்திருவிழா (மார்ச்-4) செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள், சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
மார்ச் 10ந்தேதி நேற்று வரதராஜ பெருமாள் குவலவல்லி தாயார் திருக்கல்யாணம் மிக விமர்சையாக நடைபெற்றது . கோவில் வளாகத்தில் சிறப்பு யாகம் அமைக்கப்பட்டு முறைப்படி திருமண சடங்குகள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட வரதராஜ பெருமாளுக்கு கங்கம் கட்டி திருமண விழா தொடங்கியது.
அப்போது வரதராஜ பெருமாளுக்கு பூணூல் அறிவிக்கப்பட்டு பின்னர் திருமாங்கல்ய தாரணம் அணிவிக்கும் நிகழ்வும் மாலை மாற்றுதல் வைபவ நிகழ்வும் எனமிக விமர்சையாக வரதராஜ பெருமாளுக்கும் குவல வள்ளி தாயருக்கும் திருக்கல்யாண வைபவ நிகழ்வு அப்போது நடைபெற்றது.
பின்னர் பல்வேறு தீப உபசரிப்புகள் வரதராஜ பெருமாளுக்கு காண்பிக்கப்பட்டது வருகை புரிந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டதுமார்ச்-11 தேதி செவ்வாய்க்கிழமை இரவு குதிரை வாகனத்தில் பெருமாள் சாமி புறப்பட்டு சோமேஸ்வரர் கோயில் தெப்பக் குளத்திற்கு சென்று, சோமேஸ்வரர் திருக்கல்யாணத்தை நேரில் கண்டு, வாண வேடிக்கைகளை பார்த்துவிட்டு குதிரை வாகனத்தில் கோயில் வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்தாண்டு குதிரை வாகனம் தூக்கும் முறை பொட்டணம் ஊர் பொதுமக்களை சார்ந்ததாகும்.
மார்ச் 12- ம்தேதி மாலை வரதராஜப் பெருமாள் பெரிய தேரோட்டமும் நடக்கிறது. அடுத்த நாள் மார்ச்-13 ம் தேதி பெரிய தேர் நிலை சேரும். மார்ச் 14- ம் தேதி வெள்ளிக்கிழமை காலை சோமேஸ்வரர் தேரோட்டம் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை தக்கார்/ உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) சு.சுவாமிநாதன், செயல் அலுவலர் இரா.கீர்த்தனா, திருக்கோயில் கட்டளைதாரர்கள், அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.