in

திருச்சி விமான நிலையம் செல்லும் பேருந்தில் பயணம் செய்த அமைச்சர் – 10 பயணிகளுக்கு டிக்கெட் எடுத்து ஜாலி பயணம்

திருச்சி விமான நிலையம் செல்லும் பேருந்தில் பயணம் செய்த அமைச்சர் – 10 பயணிகளுக்கு டிக்கெட் எடுத்து ஜாலி பயணம்

 

திருச்சி விமான நிலையத்தில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஸ் ஆய்வு மேற்கொள்ள இருந்தனர்.

அதற்கு முன்னதாக திடீரென திருச்சி பன்னாட்டு விமான நிலைய இரண்டாவது முனையத்திற்கு செல்லும் பேருந்தில் டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்து ஏறி அமைச்சர் மகேஸ் பயணம் செய்தார்.

தனது கட்சி நிர்வாகிகளுடன் பயணம் செய்த அமைச்சர் மகேஸ் பத்து பேருக்கு 500 ரூபாய் தாளை கொடுத்து டிக்கெட் பெற்றார்.

பேருந்து திருச்சி விமான நிலைய இரண்டாவது நிலையத்திற்கு உள்ளே வந்து உடன் அமைச்சர் இறங்கி சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முனையத்திற்கு உள்ள குரங்கம்மை தடுப்பு குறித்த ஆய்வில் ஈடுபட்டார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பயணிகள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திருச்சி பன்னாட்டு விமான நிலைய இரண்டாவது முனையத்திற்க்கு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதி துவக்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

புவனகிரி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு

திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்டு மாணவி உயர்ந்த விவகாரம் விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி