in

நத்தம் அருகே 108 வாகனத்தில் பிரசவித்த குழந்தை தாயும் சேயும் நலமுடன் மருத்துவமனையில் அனுமதி.

நத்தம் அருகே 108 வாகனத்தில் பிரசவித்த குழந்தை தாயும் சேயும் நலமுடன் மருத்துவமனையில் அனுமதி.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கருத்தலக்கம்பட்டி புதூரைச் சேர்ந்தவர் நவீன் குமார் (வயது 24) – மல்லிகா (வயது 21) தம்பதி இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணமானது, மல்லிகா நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென பிரசவத்திற்கான வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் பைலட் அப்துல் ரகுமான் கருத்தலக்கம்பட்டி புதூருக்கு விரைந்து சென்று கர்ப்பிணியை ஏற்றிக்கொண்டு பிரசவத்திற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது கோபால்பட்டி அருகே குரும்பபட்டி விளக்கு ரோடு வழியாக செல்லும் போது மல்லிகாவிற்கு பிரசவ வலி அதிகமாகி விட்டது. இதை அறிந்த அவசரகால மருத்துவ பணியாளர் குமார் பிரசவம் பார்த்தார் அப்போது அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 108 வாகனத்திலேயே சுகப்பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் பணியாளர்களை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

What do you think?

நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு ஆஷட நவராத்திரி பெருவிழா

வாயில் எலியை கவ்வியபடி பயணிகளை மிரட்டிய வாலிபர். வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.