in

ஜெயம் ரவியை சூழ்ந்துள்ள மர்மம்…. தலைமறைவான ரவி


Watch – YouTube Click

ஜெயம் ரவியை சூழ்ந்துள்ள மர்மம்…. தலைமறைவான ரவி

சாதுவான முகமும் அலட்டல் இல்லாத நடிப்பாலும் ரசிகர்களை கட்டி போட்டவர் நம்ம வீட்டு பிள்ளை ஜெயம் ரவி எந்த சர்ச்சையிலும் சிக்காதவர், தற்பொழுது திரும்பும் பக்கம் எல்லாம் இவரின் திருமண வாழ்க்கையே பேசும் பொருள் ஆகிவிட்டது.

ஏன் இந்த திடீர் முடிவு என்ற குழப்பத்தில் ரசிகர்கள் மட்டுமல்ல அவருடைய மனைவி ஆர்த்திக்கும் இருக்கிறது. ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக இரண்டு நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையை பார்த்து அதிர்ந்த அவரது மனைவி இது முழுக்க முழுக்க அவருடைய சொந்த விருப்பமே குடும்ப நலன் கருதி இந்த முடிவை எடுக்கவில்லை என்னிடம் ஆலோசனை செய்யாமல் அவரே தனியாக இந்த முடிவை எடுத்திருக்கின்றார்.

இது சம்பந்தமாக நான் பல முறை அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது தொலைபேசியை எடுக்கவில்லை. மேலும் அவரின் வீட்டிற்கு இரண்டு முறை சென்ற போதும் அவரை என்னால் பார்க்க முடியவில்லை. நானும் என் குழந்தையும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றோம்.

இவரின் இந்த முடிவு என் குழந்தைகளையும் பயத்தில் ஆழ்தி இருக்கிறது. 18 வருடமாக வாழ்ந்த வாழ்க்கையை அனைவரும் தவறாக பேசும் நிலைக்கு என்னை தள்ளி விட்டார்.

தயவுசெய்து யாரும் என்னையும் என் குடும்பத்தையும் விமர்சிக்க வேண்டாம் என்று ஆர்த்தி பதிவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்தை குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் கூறியதாவது.

ஜெயம் ரவி விவாகரத்ததை அறிவித்த பிறகு அவரை ஆர்த்தி வீட்டிற்கு சென்று இரண்டு முறை பார்க்க முயற்சித்த போது அவர் வீட்டில் இல்லை ஒரு வார காலமாக அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது.

சமீப காலமாக ஜெயம் ரவிக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை அவர் சரியாக வீட்டிற்கு வரவில்லை இரண்டு நாட்கள் வீட்டிற்கு வருவார் பிறகு சென்று விடுவாராம் அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் ப்ரோமோஷன் காக அழைத்த போது கூட செல்ஃபோன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதா கூறியுள்ளார்.

மேலும் இந்த பிரச்சனைக்கு நடிகை குஷ்பவால் தான் தீர்வு சொல்ல முடியும் ஏனென்றால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முக்கிய காரணமே குஷ்புதான்.

ஆர்த்தி ஜெயம் ரவி மேல் காதல் வயப்பட்டபோது அவரது குடும்ப நண்பரான குஷ்பு வெளிநாட்டில் ஸ்டார் ஷோ நடந்த போது ஆர்தியையும் அழைத்துச் சென்றிருக்கின்றார்.

எல்லோரும் வெளியே செல்லும் போது ஜெயம் ரவி மட்டும் நான் வரவில்லை என்று ஹோட்டலிலே தங்கி இருக்கும் போது அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தன் மனதில் இருக்கும் காதலை ஜெயம் ரவியிடம் கூறியிருக்கிறார்.

ஆரம்பத்தில் இது ஒரு ரசிகையின் காதல் என்று நினைத்த ஜெயம் ரவி போகப்போக ஆர்த்தியை காதலிக்க தொடங்கி விட்டார். பின்பு நடிகை குஷ்பு இரு வீட்டாரையும் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருக்கிறார் அதனால் இவர்களின் பிரச்சனையில் குஷ்பு தலையிட்டால் நல்ல தீர்வு கிடைக்கும் என்று அந்தணன் கூறியுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

பிரியாணி சாப்பிட்ட 40 பேர் உட்பட 100க்கும் மேற்பட்டோர்க்கு வாந்தி, மயக்கம்

நான்காவது முறையாக ஆபரேஷன்… போராட்டமான வாழ்க்கை தீர்வு கிடைக்குமா? டிடி கண்ணீர்